வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா சென்று தவிக்கும் மாணவர்களுக்கு விக்டோரியா மாநில அரசு வழங்கும் 1100 ஆஸ்திரேலிய டொலர்கள்..!! விண்ணப்ப படிவம் அனுப்ப செய்தியை படியுங்கள்..!!
அவுஸ்திரேலிய அரசினால் அறிவிக்கப் பட்ட நிதியுதவிகளை பெற தகுதிபெறாத விக்டோரியா மாநிலத்தில் இருக்கும் வெளி நாட்டு மாணவர்களுக்காக சுமார் 45 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை ஒதுக்கி உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
பல்வேறு வகையில் பாதிக்கப் பட்டுள்ள வெளிநாட்டில் இருந்து வந்து விக்டோரியா மாநிலத்தில் ஆதரவற்று இருக்கும் மாணவர்களுக்காக விக்டோரியா மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. The International Student Emergency Relief Fund என்ற உதவி திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த உதவி வழங்க உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன.
இது குறித்து விக்டோரியா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளி நாடுகளில் இருந்து எமது மாநிலத்தில் வந்து கல்விபயிலும் மாணவர் ஒருவருக்கு 1100 ஆஸ்திரேலிய டொலர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பணி புரிந்துகொண்டு கல்வி பயின்று வந்த பல மாணவர்கள் வேலையை இழந்துள்ளனர். சிலரது வேலை நேரம் குறைக்கப் பட்டுள்ளது.