“கந்த சஷ்டி கவசம்” இழிவு படுத்திய விவகாரம்.. நாத்திகம் பேசும் கமலஹாசனின் அதிரடி கருத்து..!
“கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலில் ஹிந்துக்களின் பாதுகாப்பு கவசமாக கருதப் படும் “கந்த சஷ்டி கவசம்” இழிவாக பேசப் பட்ட சம்பவம் முழு இந்தியாவையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த யூடியூப் சேனலை தடை செய்யும் படி போராட்டங்கள் வெடித்ததுடன் சேனலை நடத்தியவர்களையும் கைது செய்யும் படி அரசியல், மற்றும் அனைத்து தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் எழுந்தது.
இது தொடர்பாக பொலீஸார் விசாரணை மேட்கொண்டு வந்த நிலையில் செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர்.அத்துடன் கந்த சஷ்டி பற்றி தவறாக பேசிய சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் பொலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் இந்த விடயம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். வழமை போல் கமலஹாசன் அவர்களும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
நமக்கு பிடிக்காத விடயம் அடுத்தவருக்கு பிடித்திருந்தால் விலகி செல்ல வேண்டுமே தவிர அடுத்தவரை வேதனை படுத்த கூடாது என்ற ரீதியில் கருத்து பதிவு செய்ததுடன் நீங்கள் எத்தனை பிரித்தாலும் சூழ்ச்சிகள் செய்தாலும் தமிழர்களின் மீது எந்த சாயமும் பூச முடியாது என கூறியுள்ளார்..!!
தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2020