உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கும் அறிகுறிகளும்..அதனை நீங்களே கழிக்க வழிகளும்…இதோ..!
வாழ்க்கையில் முன்னேற என்னேரமும் யோசித்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் எந்த மாற்றமும் தெரியாதுநாள்முழுவதும் உழைத்தாலும் அதற்கான பலன்கிடைக்காது எந்த நற்காரியம் மேற்கொண்டாலும் அது தள்ளிப்போய்கொண்டே இருக்கும் இதற்கான காரணங்கள் பல உள்ளது.சிலர் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள்.திடீரென சறுக்கினால் கண்திருஸ்டி என்று சொல்வார்கள். இதற்கு என்ன வழி????
அதைப்பற்றி பார்ப்போம்.திருஸ்டிபட்டவர்கள் உடலில் அசதிகள் ஏற்படும் அடிக்கடி கொட்டாவி வரும் புது உடையணிந்தால் அது கிழியலாம்இல்லையெனில் அதில் கறுப்புக்கறை படலாம் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் வரும் தடைகள் வரும்உடல் நலக்குறைவு சோகம் பிரிவு இவ்வாறுஇருந்தால் கண்டிப்பாக கண்திருஸ்டி எனலாம்.
திருஸ்டிகள் கழிக்க அந்திசாயும் நேரம் உகந்தது திருஸ்டிகழிப்பவரை விட திருஸ்டிசுத்துபவர் வயதில்மூத்தவராக இருத்தல் அவசியம்.திருஸ்டிகழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு ஆகிய நாட்களாக இருக்க வேண்டும்.கிழக்கு திசையை நோக்கி நிற்கவேண்டும் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படிவேண்டுமானாலும்திருஸ்டிகழிக்கலாம்.
ஒருத்தருக்கொருவரென மாறிமாறி திருஸ்டிகழிக்கக்கூடாது..வாசலில் அல்லது வீட்டிற்குவருகின்றவர்கள் கண்படும்படியான இடத்தில் பூக்களை மிதக்கவைக்கலாம்பூக்களிற்க்கு திருஸ்டியை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலுள்ளது.வீட்டு வாசலில் செடிகளை வைப்பவர்கள்ரோஜாசெடியினை வைக்கவும் ஏனென்றால் ரோஜாசெடியில் முட்கள் இருக்கும் முள் செடிகள் திருஸ்டியைபோக்குமாம்
வாழைக்கன்று நடுமளவிற்கு இடமிருந்தால் நடலாம் ஏனெனில் வாழை ஒவ்வொரு வினாடியும் துளிர்த்துக்கொண்டே இருக்கும் எப்போது திருஸ்டிபடுகின்றதோ அது அப்போதே களைந்து விடுமாம் மீன்தொட்டி வைக்கலாம், குளிக்கும் போது நீரில் உப்பு சேர்த்து குளித்தால் அசதி,சோம்பல்,திருஸ்டி என்பன போகும்இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து, வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில்கட்டித்தொங்கவிடலாம். கண்திருஸ்டிக்கு முக்கியமானது ஆகாசகருடன்கிழங்கு,இது நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கும் இதை வாங்கி கிழங்கை சுற்றியிருக்கும் வேர்களை நீக்காமல் நீரில் தடவி மஞ்சள்,குங்குமம் வைத்து வீட்டிற்கு வெளியேவாசலில் கட்டித்தொங்கவிட்டால் கண்திருஸ்டி மறையும்.
கடுகு,3மிளகாய்,உப்பு,தெருமண் எடுத்து எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து 3முறை எல்லாவற்றையும் சுற்றிஎரியும் விரகுஅடுப்பில் போட்டுவிடவும் இவை அனைத்தையும் முயற்சி செய்து பாருங்கள் மகிழ்ச்சி உண்டாகும்….