பள்ளி மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த 45 வயது பெண். இந்தியாவில் அரங்கேறும் கொடுமைகள்…!!.!!
பெண்களை ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை மட்டும் பகிர்ந்தால் பெண்கள் செய்யும் கொடூரங்கள் பற்றி யார் சொல்வார்கள். கேரளா திருவனந்தபுரம் பொழியூர் என்ற பகுதியில் 45 வயதான பெண் ஒருவர் 15 வயது மாணவன் கொடுவரை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோக செய்து வந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பள்ளி விடுமுறைக்கு தனது சித்தி வீட்டிற்கு சென்ற மாணவன் குறித்த பெண்ணின் வலையில் விழுந்துள்ளான். கல்லூரி படிப்பதற்கு சித்தி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பெற்றோர் மறுத்ததால் வீட்டில் குறித்த மாணவர் சண்டை போட ஆரம்பித்துள்ளார். வீட்டு பொருட்களை உடைப்பது என ரகளை செய்துள்ளார்.
மகனின் மாற்றம் சைக்கோ தனமாக இருப்பதை உணர்ந்த பெற்றோர் மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்த வைத்தியர் கூறிய விடயங்கள் பெற்றோரை அதிர வைத்துள்ளது.
குறித்த இளைஞர் சித்தி வீட்டிற்கு விடுமுறையில் சென்றபோது பக்கத்து வீட்டி 45 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் பாலியல் ரீதியான பழக்கமாக இருந்துள்ளது. குறித்த பெண்ணிடம் முழுமையான பாலியல் அடிமையாக சிறுவன் மாறியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இருவரும் விரும்பி நடந்துகொண்டாலும் குறித்த மாணவன் மிகவும் சிறியவன் அத்துடன் ஆரம்பத்தில் சிறுவனை கட்டாய படுத்தி உறவு வைத்த பெண் பின்பு அதனை வீடியோ எடுத்து மிரட்டியே பாலியல் அடிமையாக்கி உள்ளார். நீதிமன்றில் ஆஜர் படுத்தப் பட்ட சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள பெண்ணை பொலீஸார் தேடி வருகின்றனர்..!!