விஜய் மல்லையா இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்… லண்டன் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு…!
9 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் அறவிடமுடியாக் கடன் தொடர்பில் இந்தியாவின் பிரபல பியர் உற்பத்தி தொழிற்சாலையின் அதிபர் விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் தப்பிச் சென்றிருந்த அவரை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கிங்பிஷர் பியர் உற்பத்தி தொழிற்சாலையை நடாத்தி வந்த விஜய் மல்லையா பின்னர் கிங்பிஷர் விமானசேவை நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார் எனினும் கிங்பிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை தொடர்ந்தும் அதிகரித்துச் சென்ற நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் அவ் விமானசேவை நிறுவனத்தை நடாத்துவதற்கான அனுமதி ரத்துச்செய்யப்பட்டிருந்தது.
தற்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் கிங்பிஷர் விமான நிறுவனத்தின் கடனுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அண்மையில் விஜய் மல்லையா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதத்தீர்ப்புத் தொடர்பாக 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் என்றும் இல்லாவிட்டால் தீர்ப்பை அவர் ஏற்றுக்கொண்டதாக கொள்ளப்பட்டு வரும் ஒரு மாத காலத்தினுள் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”