கணவரின் உடலைக் கொண்டு செல்ல மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம், கண்கலங்க வைக்கும் சம்பவம்…
ஒடிசா மாநிலம் கியோன்ஜகர் மாவட்டம் சஹாபடா கிராமத்தை சேர்ந்தவர் டக்ராய். இவரது மனைவி மினாட்டி முன்டா. இருவரும் சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தால் பட்டமுண்டாய் கிராமத்திற்கு மாறிச்சென்று அங்கு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென்று டக்கராய்க்கு உடல்நலம் சரியில்லாமல் போக மினாட்டி முண்டா அவரை பட்டமுண்டாய் மருத்துவமனையில் சேர்த்தார் டக்கராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.இறந்த கணவரின் உடலை சொந்த ஊரிற்கு கொண்டு செல்ல கூலி வேலை செய்யும் பட்டமுண்டாயால் முடியவில்லை. இலவசமாக அமரர் ஊர்தியில் கொண்டு செல்ல வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையேந்தி நின்றுள்ளார்.
வைத்தியசாலை நிர்வாகம் 300 ரூபாய் காசு தந்தால் தான் கொண்டு செல்ல முடியும் இல்லாவிட்டால் முடியாது என்று கையை விரித்து விட்டது. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் பட்டமுண்டாய் வைத்தியசாலை வாசலில் துணி ஒன்றை விரித்து வைத்து பிச்சை எடுத்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் பணத்தைக் கட்டி கணவரினுடைய உடலை சொந்த ஊரிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”