எயிட்ஸ் நோயாளியான ஆட்டோ ட்ரைவருடன் ஓடிப் போன 17 வயதான கல்லூரி மாணவி.! இது காதலா என அதிர்ந்த தமிழ்நாடு பொலீஸ்.!!
எயிட்ஸ் நோயாளி ஒருவருடன் ஓட்டம் பிடித்த 17 வயது மாணவி தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. நாகர் கோயில்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு சென்றுள்ளார். நாகர்கோயில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை கூலி தொழில் செய்து வந்துள்ளார், மாணவி கல்லூரியில் முதலாமாண்டு கல்வி பயின்று வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போக பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
பொலீஸார் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமி ஆட்டோ ட்ரைவர் ஒருவரை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. ஆட்டோ ட்ரைவரும் வீட்டில் இல்லாததால் சந்தேக பட்ட பொலீஸார் ஆட்டோ ட்ரைவரை தேடியதில் இருவரும் கோவையில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இருவரிடம் நடந்த விசாரணையில் ஆட்டோ ட்ரைவர் தனக்கு எயிட்ஸ் இருப்பதாக கூறி பொலீஸாரை அதிர வைத்துள்ளார்.
மாணவின் வாழ்க்கை வீணாகி விட்டது என பொலீஸார் ஆட்டோ ட்ரைவரை மிரட்டிய போது குறித்த சிறுமியோ ஆட்டோ ட்ரைவருக்கு எயிட்ஸ் இருப்பது தெரிந்தே காதலித்ததாக கூறி அதிர வைத்துள்ளார். இருவரும் உறவில் இருந்ததால் சிறுமிக்கும் எயிட்ஸ் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில்
மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதோடு ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மருத்துவ உதவியுடன் விசாரித்து வருகின்றனர். எயிட்ஸ் என தெரிந்து காதலனுடன் ஓடிய மாணவியை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.!!