ஆடை அணிந்திருக்கும் பெண்ணின் உடலை, தொடுதல், தடவுதல், உரசுதல் பாலியல் குற்றமல்ல..! உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பால் அதிரும் இந்தியா.!!
ஆடையுடன் இருக்கும் பெண்களை தொட்டு தடவுதல் பாலியல் குற்றமல்ல, அப்படி தடவுவது பாலியல் வன்முறைகளுக்குள் வராது என மும்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிறந்த குழந்தை தொடங்கம் 90 வயது முதியவர் வரை பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்று வரும் நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது பெண்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவரின் வழக்கு நீதிமன்றம் வந்த போதே இந்த தீர்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட குறித்த நபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா கனேடிவாலா முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டபோது வழக்கை விசாரித்த புஷ்பா
” பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது ஆடையில்லாத நிலையில் உடலோடு உடல் உரசுவது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது” போன்றவை தான் பாலியல் துன்புறுத்தல். ஆனால் ஆடையின் மேல் உடல் பாகங்களை தொடுவது, உரசுவது,தடவுவது, போன்றவை பாலியல் குற்றம் இல்லை, இதை எல்லாம் பாலியல் குற்றம் என்றால் வாழ்வது கடினம்.
எனவே ஆடை மீது தொடுதல்,தடவுதல் தவறல்ல என தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!!