பதவியிலிருந்து இறங்க மறுக்கும் மாலைதீவு அதிபர்
மாலைதீவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் மாலைதீவு முன்னேற்றக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் அப்துல் யாமீன் போட்டியிட்டார். எதிராக மாலைதீவு ஜனநாயக கட்சியில் ஒருவரான இப்ராகிம் முகமது சோலி நிறுத்தப்பட்டார்.
பதிவான ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டபோது தேர்தலின் முடிவுகள் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியே மக்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இப்ராகிம் முகமது 1 லட்சத்து 34 ஆயிரத்து 616 ஓட்டுகளும் (58.3 சதவீதம்), அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 96 ஆயிரத்து 132 ஓட்டுகளும் (41.7 சதவீதம்) கிடைத்து இருந்தது. இப்ராகிம் முகமது அபார வெற்றி பெற்று இருந்தார். பின்னர் தொலைக்காட்சியில் பேட்டியின்போது அதிபர் அப்துல் யாமீன் தான் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் ஜாமீன் தோல்வி அடைந்ததால் , அதிபர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க மாற்று வழியில் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த தேர்தலில், நடந்த ஊழல் சம்மந்தமாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும் . அதனை நிரூபித்துக் காட்ட தன்னுடைய கட்டுப்பாட்டிலுள்ள உளவுத்துறையினரிடம் அறிக்கை பெற்று வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஞாயிறன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ள தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்வார் என்றும் எதிர்க்கட்சி கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அகமது மஹ்லுப் கூறியுள்ளார்.