மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த கணவன் 3 மாதக் குழந்தையை… சந்தேகத்தின் உச்சக் கட்ட கொடூரம்
மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் உச்சக்கட்டத்தில் அவளைத் துடிதுடிக்கக் கொலை செய்துவிட்டு தனது மூன்று மாதக் குழந்தையையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தலைமறைவாகியுள்ள ஒரு சைக்கோவைப் பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவைத் தினம் தினம் கலங்கடிக்கின்ற கொலைகளில் இதுவும் ஒன்று.
தஞ்சை மாவட்டத்தின் செந்திப்பட்டி கிராமத்தின் புதுக்குடி கீழ்த் தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி (33 வயது) என்பவனே தனது மனைவியான ஷீலா(26 வயது) என்பவரையும் 6 மாதங்களேயான மகனையும் கொடுரமாகக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளான்.
கலகலப்பான சுபாவம் கொண்ட ஷீலா மற்றவர்களுடன் சிரித்துப் பேசுவது கணவன் ஆறுமுகசாமிக்குப் பிடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. பல முறை ஷீலாவின் பெற்றோரால் இவர்கள் சமாதானமாக்கப்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது ஆண்குழந்தையை பெற்றெடுத்த ஷீலா அண்மையிலேயே கணவனின் வீட்டுக்கு வந்துள்ளார். பிறந்த குழுந்தை தன் சாயலில் இல்லை என்று தெரிவித்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார் ஆறுமுகசாமி. இந்நிலையில் சம்பவ தினமன்றும் அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்திருந்த ஆறுமுகசாமி மனைவி நித்திரைக்குச் சென்றபின் அரிவாளால் அவரது தலையை வெட்டிக் கொலை செய்துவிட்டு குழந்தையையும் தலையணையால் அமுக்கிக் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தற்போது அக் கொலைகாரனைப் பொலிசார் தேடிவருகின்றனர்.