இந்தியாவில் 4 பேர் கொண்ட குழுவால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு சித்திரவதை செய்து கொல்லப் பட்ட 19 வயது பெண்ணின் வீட்டிற்கு 80 சிஆர்எப் வீரர்கள் பாதுகாப்பு.! காரணம் இது தானாம்.!!
உத்திரப்பிரதேசத்தில் செப்டம்பர் 14ம் திகதி 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, நாக்கு உட்பட உடலில் பல பாகங்கள் அறுக்கப் பட்டு கொலை சித்திரவதை செய்யப் பட்ட நிலையில் மீட்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட 19 வயது இளம் பெண் செப்டம்பர் மாதம் 29ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது சடலத்தை கூட பெற்றோரிடம் கொடுக்காத பொலீஸார் இரவோடு இரவாக குறித்த யுவதியின் கிராமத்திற்கு சடலத்தை எடுத்துச் சென்று எரித்தனர்.
புதைக்க வேண்டிய பெண்ணை பொலீஸார் அவசரம் அவசரமாக எரித்தது உட்பட பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் கற்பழிக்கப் படவில்லை என குறித்த மாநிலத்தின் தலைமை பொலீஸ் அதிகாரி குறிப்பிட்டதுடன் மருத்துவ அறிக்கையில் கற்பழிக்கப் படவில்லை என உள்ளதாக தெரிவித்தது குற்றவாளிக்கு அரசு துணை போகிறது என்பதை நிரூபித்தது.
அது மட்டும் இன்றி மாவட்ட நீதிபதி நேரடியாக சென்று பாதிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டிய வீடியோக்களும் வெளியானது. இதனால் அந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறப்பட்ட நிலையில் உ.பி பொலீஸ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் குடும்பத்தினருக்கு தொடர்ந்தும் ஆளும் கட்சி அச்சுறுத்தல் விடுத்து வருவதால் சிஆர்எப் வீரர்களின் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த புகார்களை விசாரித்த உ.பி உச்ச நீதிமன்றம் குடும்பத்தினருக்கு காவல் துறை பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக சிஆர்எப் வீரர்களை பாதுகப்புக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
இதன் படி சிஆர்எப் கமாண்டர் மன் மோகன் சிங் தலைமையில் சுமார் 80 வீரர்கள் ஹாத்ராஸ் வந்துள்ளனர். பாதிக்கப் பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலையில் தங்கவைக்கப் பட்டிருக்கும் 80 வீரர்களும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். கற்பழிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு குற்றவாளியின் உறவினர்களால் ஆபத்து என பொலீஸ் மற்றும் சிஆர்எப் வீரர்கள் இத்தனை பேர் பாதுகாப்பு வழங்குவது நம் நாட்டில் தான்..குற்றவாளிகள் சூழ் உலகம்.!