மனைவியின் காதல் லீலைகள் அறிந்தும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட கணவர்.! இளம் மனைவி எடுத்த அதிரடி முடிவு.!!
கணவருடன் பொலீசார் சேர்த்து வைத்ததால் இளம் மனைவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினோதா என்ற பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வினோதா பின் அடிக்கடி சண்டையிட ஆரம்பித்துள்ளார்.
காரணம் இல்லாமல் சண்டை வருவதால் மூர்த்தி வினோதாவுடன் பணி புரியும் தோழிகளிடம் கேட்ட போது வினோதா நபர் ஒருவருடன் கள்ளக் காதலில் இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து வினோதாவிடம் மூர்த்தி கேட்ட போது இல்லை என மறுத்த வினோதா தன் தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தான் வினோதாவின் பெற்றோருக்கு வினோதா பணிபுரியும் பாலாஜி நகர் பனியன் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபருடன் தங்கள் மகள் காதலில் இருப்பது புரிந்தது. இதனை தொடர்ந்து மருமகனை அழைத்த வினோதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலீஸார் வினோதாவிடம் சமாதானம் செய்து மூர்த்தியுடன் அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற வினோதா கவலையில் இருந்ததுடன் நேற்றைய தினம் மூர்த்தி வேலைக்கு சென்றபின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வேலைக்கு சென்ற மூர்த்தி திரும்பி வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மனைவியை மீட்டு வைத்தியசாலை எடுத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.!