தாய்க்காக நண்பனைக் கொலை செய்து தலையை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்ற இளைஞன்.
மாண்டியா மாவட்டத்தின் மலவள்ளி பகுதியின் சிக்கபாகிலு கிராமத்தைச் சேர்ந்த பசுபதி தனது நண்பன் கிரீசுடன் ஏற்பட்ட தகராறினால் அவரது தலையைக் கோடாரியால் வெட்டி எடுத்துக்கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
இவ்வாறு நண்பனின் தலையை வெட்டும் அளவுக்கு நண்பன் செய்த செயல் என்ன?
கொலை செய்த பசுபதியின் தாய்க்கும் நண்பன் கிரீசுக்கும் இடையில் அண்மையில் திடீரென்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குழப்பத்தில் கிரீஸ் பசுபதியின் தாயை மிகவும் மோசமாகத் திட்டியுள்ளதாகத் தெரிகின்றது.
இது பற்றி நண்பனிடம் கேள்வி கேட்ட போது இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும் சண்டையில் பசுபதி கிரீசின் தலையைக் கோடாரியால் வெட்டி எடுத்துக்கொண்டு அங்குள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இக் கொலைச் சம்பவம் அக் கிராமத்தை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.