அமைதிக்கான முயற்சியில் இந்தியா ஒரு அடி முன்னோக்கி வைத்தால் நாம் இரு அடி எடுத்து வைக்கத் தயாராயுள்ளோம் – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
அமைதிக்கான முதல் அடியை நாம் எடுத்து வைத்தோம். இந்தியா ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்தால் நாம் இரண்டு அடி எடுத்து வைக்கத் தயாராக இருக்கின்றோம். இதனை பாகிஸ்தான் பிரதமர் முன்னரேயே கூறிவிட்டார். என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி.
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றிருந்த அவர் அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இவ் விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது இரண்டு நாடுகளுமே அணுவாயுத வலிமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன. இந்நிலையில் எமக்கிடையிலான பிரச்சனைகளைப் போரின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தை ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.