நடிகர் விஜய்சேதுபதியிடம் சம்பந்தமில்லாத கேள்வி கேட்டு அவமானப்பட்ட அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண் ஊடகவியலாளர்!
சினிமாப் பிரபலங்களிடம் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்பதும், அதற்கு அவர்கள் ஏதாவது முரண்பாடான பதில்களைக் கூறியவுடன் அதனைப் பரபரப்பாக்கி, செய்தியாகப் பிரசுரித்து மகிழ்வதும் எம்மைப் போன்ற இன்றைய நவீன ஊடகவியலாளர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட செயலே.
இசைஞானி இளையராஜா முதற் கொண்டு, இயக்குனர் பாரதிராஜா, எனப் பல திரையுலகப் பிரமுகர்களிடம் இப்படி சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு அவர்களை சீண்டி, கோபப்படுத்தி செய்தியாக்கிய பல சம்பவங்களை நாம் அறிந்துள்ளோம்.
இதே மாதிரியான ஓர் சம்பவம் தான் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மெல்பேண் அவுஸ்திரேலியாவிற்கு திரைப்பட விழாவிற்கு வருகை தந்திருந்த விஜய் சேதுபதி அவர்கள் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதும் இடம் பெற்றது.
விஜய் சேதுபதியிடம்
“தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு திரு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
காஷ்மீரில் இந்திய அரசின் செயற்பாடுகள் குறித்து உங்கள் பதில் என்ன ? என இரு வேறு சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்பிய பெண் ஊடகவியலாளருக்கே அனைவர் முன்னிலையிலும் கூனிக் குறுகும்படி பதில் வழங்கியிருந்தார் மக்கள் செல்வன்.
” நீ மொதல்ல உட்காரும்மா, இடத்திற்கு தகுந்தாற் போல கேள்வி கேட்க பழகிட்டு வா” அப்படீன்னு கடிந்து கொண்டார் விஜய் சேதுபதி. தவிர தமிழ்நாட்டு ஊடகங்களில் தான் இப்படியான கேள்வி கேட்கிறார்கள் என்று பார்த்தால், இங்கேயுமா? என கிண்டலாக கூறினார் விஜய் சேதுபதி.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.