சுவிட்சர்லாந்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இலங்கை இளைஞன்..!!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்து சொலதூன் மாநிலத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். மேலும் இவ்வாறு உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட சயந்தன் என்ற இளைஞன் எனப்படும்.
மேலும் இவர் இரண்டு வருடமாக சுவிஸ் நாட்டிலேயே அகதியாக தஞ்சம் கோரிய நிலையில் தற்காலிக குடியுரிமை பெற்று வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் நண்பர்களுடன் நீர்த்தேக்கம் ஒன்றில் நீராட சென்ற வேளையில் நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலை அறிந்த பொலிஸார் பல மணி நேர போராட்டத்தின் பின்னர் அந்த இளைஞனின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.