ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்..!!! ஒருவர் பலி..!!
கொழும்பில் கொஹுவல, ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. மேலும் இந்த சம்பவத்தால் இருவர் காயமடைந்தாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இரண்டு மர்மநபர்களால் Land Cruiser வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்றோருவர் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
உடுஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ரணவக்க சுசில் ருவன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர் அந்த வாகனத்தின் சாரதியாக செயற்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த 40 வயதுடைய நபர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.