மோடி ஆட்சியிலும் ஒரு நல்ல விடயம் தமிழகத்துக்கு நடந்திருக்கு..
என் மொழி நாட்டில் படித்த படிப்புக்கு வேலை இல்லை, பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, ஏன் ஒழுங்கான கழிவறைக்கூட இல்லை. ஆனால் நம் மத்திய அரசு பதவி ஏற்றவுடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயலுகிறது.
நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. தலைமுறை தலைமுறையாகப் பின்தங்கிய நிலையிலிருந்த என் மாணவர்கள் கல்வி கற்க அரசுப் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தாய் மொழி வழியிலேயே சரிவிகித கல்வி கிடைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இன்று எம் மக்கள் ஆங்கில மோகத்தால் தமிழை மறந்து போயினர். இன்றும் நம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானதால் பல பள்ளிகள் முடப்பட்டு வருகிறது.
அதேசமயம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை வேறு. இந்தி மொழி பேசாத மாநிலங்களில், அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தியைக் கட்டாய பாடமாக்க வேண்டும் என அரசு அறிவித்துயுள்ளது. இந்த அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கும் எண்ணத்துக்கு எதிராகத் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பெரும் புரட்சி வெடிக்கின்றன.
இதனால் அரசு திருத்தப்பட்ட புதிய கல்விக்கொள்ளை வரைவுத் திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாகப் பயில வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு கூறிய மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற முயற்சியை கைவிட்டு தீர்க்கப்படாமல் உள்ள வேறு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் வேண்டுகோள். இந்திக் கட்டாயமில்லை என்று மத்திய அரசு எடுத்த முடிவிற்கு நன்றி.