காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் கொலை செய்யப்பட்டரா?
காஷ்மீர் மாநிலமத்தில் புல்வாமாவில் சென்ற மாசி மாதம் 14-ஆம் திகதி இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது வெடிகுண்டுகளை ஏற்றி வந்த கார் ஒன்றை மோதவிட்டு தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது.மேலும் இராணுவ வீரர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சில நாட்களுக்கு முன்னரே தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட Maruti Eeco car-ன் உரிமையாளரும் பிஜ்பெஹராவைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனுமான Sajjad Bhat தலைமறைவு.இதனை தொடர்ந்து அனந்த்நாக்கில் மரஹோம் கிராமத்தில் தீவிரவாதிகள் ஒழிந்து இருப்பதாக தகவல் கிடைத்த படையினர் சுற்றிவளைத்து தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர்.இந்த என்கவுன்டர் தாக்குதலில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் Sajjad Bhat ஒருவன் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.தீவிரவாதிகளிடத்தில் இருந்த அதிகமான ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.