இந்தியாவை எதிர்த்து காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை நாட்டிய பிரதமர் இம்ரான்…!!!
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பாகிஸ்தான் வர்த்தகம், போக்குவரத்து சேவை, இந்திய கலாச்சாரம் என போன்றன முற்றாக தடை செய்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகப் போர் செய்ய பாகிஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
!Advert!
பாகிஸ்தானின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமியத்தில் உள்ள ஜின்னா கன்வென்ஷன் சென்டரில் இன்று இடம்பெற்ற ஒரு கொடியேற்றும் விழாவின் போது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் ஆல்வி உரையாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் அமைதியை நேசிக்கும் நாடு, காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறது. இருப்பினும், நமது அமைதியை இந்தியா எங்கள் பலவீனம் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை, ஆனால் யுத்தம் எங்கள் மீது மேற்கொள்ளப்பட்டால் நாங்கள் முழுமையாக தற்காத்துக் கொள்வோம். யுத்தம் இரு நாடுகளுக்கு இடையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக அதன் தாக்கம் உலகம் முழுவதும் பாதிக்கப்படும். இந்தியா நியாயமானதாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
!Advert!
காஷ்மீருக்கு எதிராக இந்தியா செய்த கொடூரமான குற்றங்களை வெளிப்படுத்த சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி நாட்டு மக்களிடையே கேட்டுக்கொண்டார். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று உறையாட உள்ள பாகிஸ்தான் பிரதமர், அங்கு பாகிஸ்தான் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவார் என ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.