தந்தை பெரியாரின் பேரனுக்கு கொலை மிரட்டல்.! பொலீஸார் அதிரடி.!!
பெரியாரின் பேரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் மனோகரன் அவர்கள் சற்றுமுன்னர் பொலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார். கள்ளப் பாளையத்தை சேர்ந்த மனோகரன் பெரியாரின் கொள்கைகளுக்கு மிகவும் நேர் எதிர் ஆனவர்.
மதத்தின் மீதான பற்றால் யாரையும் மதிக்க தெரியாதவர் என்றுகூட சொல்லலாம், இதனால் மனோகரனுக்கு எதிராக பலர் புகார் கொடுத்து வந்துள்ளனர். அண்மையில் வாட்சாப் குரூப்பில் பெரியார் பற்றியும், பெரியாரின் கொள்கைகள் பற்றியும் தவறாக திட்டி தீர்த்து வந்துள்ளார்.
இதனை பார்த்த மனோகரனின் ஊரைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் பெரியார் பற்றி தவறாக பேச வேண்டாம் எனவும்,பெரியார் மதிக்கக் கூடியவர் எனவும் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடுப்பான மனோகரன் கூலி படையை ஏவி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதுடன்,
தொலைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளர். மனோகரனின் அழைப்பை ரொகோர்ட் செய்த பிரபு அதனை பொலீஸாரிடம் ஒப்படைத்ததுடன் அவர் மீது புகர் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பொலீஸார் மனோகரனை கொலைமிரட்டல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.பிரபு தொடர்பாக விசாரணை செய்ததில் பிரபு பெரியாரின் பேரன் முறை என தெரியவந்துள்ளது..!!