கள்ளத் தொடர்பின் காரணமாக தகாத உறவுக்கு அழைத்தது மரணமடைந்த மனிஷா தான்.! குற்றவாளிகளை காப்பாற்ற பாஜக தலைவர் அதிரடி..!!
உத்திரப்பிரதேசத்தில் சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங், லவ்குஷ் சிங் என்ற நான்கு இளைஞர்களால் கொடூரமாக கற்பழிக்கப் பட்டு உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் சென்றவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் மரணமடைந்தவர் மனிஷா வால்மிகி. தாலித்பெண்ணான 19 வயதான மனிஷாவின் மரணத்திற்கு உயர் ஜாதி என தங்களை கூறிக்கொள்ளும் நால்வரே காரணம் என மரண வாக்குமூலத்தில் மனிஷா கூறியிருந்தார்.
குற்றவாளிகளுக்காக உத்திரப்பிரதேச காவல் துறை மற்றும் அரசு பல உதவிகளை செய்தது. இருப்பினும் மக்களின் போராட்டத்தினால் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். இருப்பினும் அவர்களை விடுதலை செய்யக் கோரி பாஜக போராட்டம் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் 44 கிரிமினல் குற்றங்கள் செய்து , இன்னும் 44 வழக்குகள் உள்ள குற்றவாளியும் பாஜக தலைவருமான ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் நான்கு இளைஞர்களும் நிரபராதிகள் என கூறியுள்ள இவர் மனிஷாவிற்கு இந்த இளைஞர்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கள்ளத் தொடர்பின் காரணமாக வயலுக்கு செல்லும் போது இவர்களை வர சொல்லிவிட்டு சென்று இருக்கலாம். வயல் வெளியில் தவறாக இருந்த போது மனிஷாவின் பெற்றோர் கண்டு அந்த இடத்திலேயே மகளை அடித்து உதைத்ததால் பெண் ஆபத்தான நிலைக்கு சென்று இருக்கலாம்,
இதனை தொடர்ந்து குற்றம் செய்யாத இளைஞர்கள் மீது கொலையை சித்தரித்துள்ளனர் என தெரிவித்துள்ளார், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றவாளிகள் காப்பாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவது மக்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறது..!!