பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வருட சிறைத் தண்டனை விதித்த நாடு….!
எல்சல்வடோர் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் தனது வளர்ப்புத் தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அது சம்பந்தமான விசாரணையை முன்னெடுத்த அந் நாட்டு நீதிமன்றம் அப் பெண்ணுக்கு 20 வருட சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தனது கருவைக் கலைக்க முயன்றதாலேயே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இமெல்ட்டா கோட்ஸ் எனும் 18 வயதுப் பெண்ணுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இப் பெண் அவரது வளர்ப்புத் தந்தையாலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரது வளர்ப்புத் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ள தாகவும் குறித்த பெண் தன் வயிற்றில் வளர்ந்த தனது வளர்ப்புத் தந்தையின் கருவைச் சுமக்க விரும்பாமல் கருக்கலைப்புச் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இமெல்டா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். கருக் கலைப்புச் செய்வது எல்சல்வடோர் நாட்டில் சட்டவிரோதமானது என்பதாலேலேயே அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் இமெல்டாவுக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது அந் நாட்டில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”