இப்படி ஒரு சகோதரியா?? தங்கையின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த சகோதரி..!! பார்ப்போரின் இதயத்தை உருக செய்யும் காணொலி..!!
சிரியாவில் மேற்கு இட்லிப்பின் அரிஹாவில் நேற்று இடம்பெற்ற ரஷ்ய அல்லது சிரிய அரசாங்கப் படைகள், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்திய வான்வழி தாக்குதலில், 5 மாடி கட்டிடம் ஒன்று தரையோடு தரையாக சாய்ந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் Asmaa Naqouhl என்ற தாய் இடர்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய 5 வயது மகள் ரிஹாம் கட்டிட இடர்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த கட்டிடத்தின் விளிம்பில் இருந்த தன்னுடைய 7 மாத சகோதரி கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவருடைய டி-ஷர்ட்டை ரிஹாம் இறுக்கமாக பிடித்து கொண்டார். அதேவேளை தந்தை அம்ஜத் அல் அப்துல்லா, என்ன செய்து தன்னுடைய மகள்களை காப்பாற்றுவது என்பது தெரியாமல் தலையில் கைவைத்தபடியே திகைத்து நின்றார். இதை பார்ப்பவர்களின் இதயம் உருக செய்யும் காணொலி இணையத்தில் தீவிரமாக வைரலாகி வருகின்றது.
மேலும் இந்த நிலையில் மீட்கப்பட்ட 7 மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதேசமயம் தன்னுடைய தங்கையின் உயிரை கைப்பற்றிய ரிஹாம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.