கொழும்பில் ரயில் மோதி இளம் பெண் பட்டதாரி ஒருவர் பலி..!!
கொழும்பில் இருந்து வந்த புகையிரதத்தோடு மோதி இளம் பெண் பட்டதாரி ஒருவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கொழும்பில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற பெண் ரயில் வரும் நேரத்தில் கை தவறி மோட்டார் சைக்கிள் இயங்கி, ரயில் வீதியை நோக்கி பயணித்து சென்றது. அப்பொழுது கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மோதுண்டு படுகாயமடைந்த பெண் பட்டதாரி ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்
மேலும் இந்த சம்பவத்தில் கந்தான பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய திலினி சத்துரிக்கா என்ற பட்டதாரி பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த ரயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தவறினாலேயே இவ்வாறு நடந்தது என்று ராகம வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் கூறியுள்ளார்.