அமெரிக்காவில் மீண்டும் மரண தண்டனை அமுல்..!!
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த மரண தண்டனை தொடர்பாக அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள முதலாவதாக ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் சட்ட மா அதிபர் பில் பார் தெரிவித்துள்ளார்.
விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள ஐந்து கைதிகளும் குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பார் தனது அறிக்கையில் தெரிவித்தார். குற்றவாளி 5 பேருக்கும் எதிர்வரும் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தண்டனை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த மரண தண்டனை மீண்டும் அமுல் படுத்துவது தொடர்பில் அமெரிக்க சட்ட மா அதிபர் மேக்கொண்ட நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரால் கண்டன விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.