திரைப்பட பாணியில் கணவருக்கு திருமணம் செய்து வைத்த முதல் மனைவி.! பின் கணவரின் தம்பியுடன் சேர்ந்து வீடியோ எடுத்து புது மணப்பெண்ணுக்கு செய்த செயல்.!!
பணத்திற்காக கணவனை வேறு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு கணவனின் தம்பியுடன் சேர்ந்து கணவனின் புது மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய குடும்பம் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த அழகிய பெண் ஒருவருக்கு பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 6 மகன் உள்ள நிலையில் மகனின் பள்ளி ஆசிரியையுடன் கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
எத்தனை சொல்லியும் கணவரால் அந்த உறவில் இருந்து மீள முடியவில்லை. இதனால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். ஆனால் இருவரும் வியாபார பார்ட்னராக இருந்தனர். இதன் போது வியாபார ரீதியான கணவரின் மூலம் அவரது நண்பரும், நண்பரின் மனைவியும் அறிமுகமானார்கள். ஆந்திர மாநிலம் நெல்லூர் பாளையம் சந்திரபாடியம் என்ற பகுதியில் நடைபெற்ற கட்டிடப் பணி தொடர்பாக, சீனிவாச ரெட்டி என்ற கணவரின் நண்பர் குறித்த பொண்ணுக்கு விளக்கம் கொடுத்தார் அத்துடன் தன் மனைவியையும் அறிமுகப் படுத்தினார்.
சீனிவாச ரெட்டியின் மனைவி பத்மாவதி சற்று வித்தியாசமாக தெரிந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். சில நாட்கள் போனதும் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்கிறது, அதனால் இருவரும் பிரிந்துவிட்டோம் என கூறியதுடன் நட்பாக பழகியுள்ளார். சீனிவாச ரெட்டியின் தாயான சந்திரகலா குறித்த பெண்ணிடம் மகனை திருமணம் செய்துகொள்ளும் படி கூறியுள்ளார்.
பத்மாவதியும் கணவரை பிரிந்துவிட்டதாக கூறியதை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் 90 சவரன் நகை மட்டும் பணம் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து சில நாட்களில் கர்ப்பமாக இப்பவே குழந்தை வேண்டாம் என கருவை கலைக்க வைத்துள்ளார் சீனிவாச ரெட்டி. பின்னர் வீட்டில் தங்காமல் 3 4 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்தவர் தேடி பார்த்ததில் மனைவி மற்றும் தாய், தம்பியுடன் வாழ்வது தெரியவந்துள்ளது. பின்னர் குறித்த பெண் சென்று மாமியாரிடம் கேட்ட போது 14 லட்சம் கொடுத்தால் சென்றுவிடுவதாக கூறுகிறாள். முடிந்தால் கொடு கொடுத்தால் உன்னுடன் என் மகன் வாழுவான் என கூறியுள்ளார். முதல் கணவரும் ஏமாற்றியதால் இரண்டாவது கணவர் வேண்டும் என்பதற்காக 14 லட்சம் ரூபாவை வங்கியில் போட்டுள்ளார். பின்னர் மாமியாருடன் சென்று வாழ்ந்துள்ளார்.
அங்கு இருந்த கணவரின் தம்பியும், முதல் மனைவியும் சேர்ந்து அண்ணி குளிப்பதை வீடியோ எடுத்ததுடன் அதை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஏற்கனவே முடிவு எடுக்கும் நிலையில் இருந்தவர் பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பொலீஸ் பொலீஸார் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணை செய்ததில் சீனிவாச ரெட்டி மற்றும் அவரது மனைவி மீது ஏற்கனவே பெண்களை பணம் ஏமாற்றி பணம் பறித்த வழக்குகள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கைது செய்யப் பட்ட சீனிவாச ரெட்டி, பத்மாவதி, சந்திரகலா, கிஷோர் ஆகியோரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.!