நிலப் போக்குவரத்து ஆணையம், குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான முன்னோடிப் பொறியியல் ஆய்வை 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவு..!!!
சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம், குறுக்குத் தீவு ரயில் பாதைக்கான முன்னோடிப் பொறியியல் ஆய்வை 2022 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவுள்ளது. மேலும் அந்த ஆய்வு நிறைவடைந்ததும், கட்டுமானக் குத்தகைக்கு ஆணையம் அழைப்பு விடுக்கும்.
மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதியின் நேர் கீழே குறுக்குத் தீவு ரயில் பாதை உருவாக்கப்பட விருப்பதாகப் போக்குவரத்து அமைச்சு அறிவித்த இரண்டு நாட்களில் பொறியியல் ஆய்வு பற்றிக் கூறப்பட்டுள்ளது. குறுக்குத் தீவு ரயில்பாதைக்கான சுரங்கக் கட்டுமானப் பணிகள் நிலத்திற்கு 70 மீட்டர் அடியில் நடைபெறவுள்ளன.
இதனால் கூடுதலான மண் அழுத்தம், அதிகமான கட்டுமானச் செலவு, ஊழியர்களின் பாதுகாப்பு அக்கறை போன்ற சவால்கள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எனினும் அவற்றைக் கையாளும் ஆற்றலும் அனுபவமும் சிங்கப்பூரிடம் உள்ளதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.