சிங்கப்பூர் போக்குவரத்து பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
சிங்கப்பூரில் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெறவிருப்போர் கட்டாய பாவனைப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று அந்நாட்டு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும் இந்த மாதம் 16 ஆம் திகதியில் இருந்து வாகனம் ஓட்ட கற்றுக்கொள்வோர் உரிமம் பெறுவதற்கான தேர்வுக்குப் பதிந்து கொள்ளும் முன்னர், கட்டாயம் பாவனைப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். 2, 2A, 2B, 3, 3A ஆகிய பிரிவுகளுக்கான வாகனமோட்டிகளுக்கு அது பொருந்தும்.
இந்த மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பதிந்து கொண்டோருக்கு அந்த நடைமுறை தேவையில்லை. அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து விபத்துகளின் அடிப்படையில் பாவனைப் பயிற்சி அமைந்திருக்கும். அதில் மூன்று பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றையும் அதிகபட்சம் 20 நிமிடங்களில் நிறைவு செய்யலாம்.