நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் கொடுத்த பொய்ப் புகாரால் நேற்று இரவு முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டை…!!!
சிங்கப்பூரில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வழங்கிய தவறான புகாரால் நேற்று இரவு முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாலை ஆறரை மணியளவில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒருவர் தம்மைத் தாக்கியதாக 19 வயதுடைய மாணவி ஒருவர் புகார் அளித்தார்.
அதன் பின் பொலிஸார் அதன் கூர்க்கா (Gurkha) உள்ளிட்ட படையினரைக் கொண்டு தேடுதல் வேட்டையைத் ஆரம்பித்துள்ளனர். மேலும் அந்த விசாரணையின் முடிவில் குறித்த பல்கலைக்கழக மாணவி கொடுத்தது பொய்ப் புகார் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏன் அவ்வாறு தவறாக புகார் வழங்கினார் என்பதன் தொடர்பில் பொலிஸார் மாணவியிடம் விசாரணையை நடத்தி வருகின்றனர்.