பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ள முக்கிய விடயம்..!!!
கொழும்பில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கைக்கான சுவிஸ் தூதரக பெண் பணியாளர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அனைத்து தகவல்களும், இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பன்னிப்பிட்டி பகுதி நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக திட்டமிடப்பட்ட நாடகமாகும். இதனை தாங்கள் கண்டறிந்து, இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார். அதே நேரத்தில் வெள்ளை வான் ஊடக சந்திப்பு ஒரு நாடகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Videos & Video Copyrights Owned By: Hiru News