வெளிநிறுவனங்களிலிருந்து பணிக்கு அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு முறையான ஓய்விடங்களை வழங்குவது குறித்த வழிகாட்டி விதிமுறைகள் அறிமுகம்..!!
சிங்கப்பூரில் வெளிநிறுவனங்களிலிருந்து பணிக்கு அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு முறையான ஓய்விடங்களை வழங்குவது தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மனிதவள அமைச்சு, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை இணைந்து வழிகாட்டி விதிமுறைகளைத் உருவாக்கவுள்ளன. அரசாங்கத்தின் Workcare திட்டத்தின்கீழ் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
துப்புரவாளர்கள், பாதுகாவல் அதிகாரிகள் போன்ற குறைந்த வருவாய் ஊழியர்களின் வேலைச்சூழலை மேம்படுத்துவது நோக்கம். அதன் தொடர்பில் கட்டட உரிமையாளர்கள், குறைந்த வருவாய் ஊழியர்கள் என 600க்கும் அதிகமானோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. ஏப்ரல் மாதம் தொடக்கம் மனிதவள அமைச்சின் கண்காணிப்பு அதிகாரிகள், உணவு நிலையங்கள், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட 200க்கும் அதிகமான இடங்களுக்குச் சென்றனர். பெரும்பாலான இடங்களில் ஊழியர்களுக்கு ஓய்விடங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றுள் சில இடங்கள் அசுத்தமாகவும் காற்றோட்டம் இல்லாமலும் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.