சிங்கப்பூரில் நடந்த கோர விபத்தில் பிலிப்பீன்ஸ் சேர்ந்த இருவர் பலி…!!
சிங்கப்பூர் லக்கி பிளாஸாவில் நேற்றைய தினம் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பிலிப்பீன்ஸ் சேர்ந்த 02 பேர் உயிரிழந்ததுடன் 02 படுகாயம் அடைந்துள்ளனர். சிங்கப்பூரில் நடந்த கொடூர கார் விபத்தை பிலிப்பீன்ஸ் தூதரகம் உறுதி செய்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்ட்து. விபத்தில் சிக்கியவர்களில் 2 பேர் சகோதரிகள், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் இன்னுமொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தில் சிக்கியவர்கள் 37 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். நேற்று மாலை 5 மணியளவில் ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள லக்கி பிளாஸா கடைத்தொகுதியின் அருகே கார் ஒன்று சாலைத்தடுப்பை மீறிச் சென்றதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 64 வயதுடைய வாகன ஓட்டுநர், அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி உயிரை கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Grab வாகனச் சேவையில் உள்ளார். விபத்தைத் தொடர்ந்து நபர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.