சிங்கப்பூரில் தமது சேவைகள் மூடப்படும் என்ற தவறான வதந்தியை நம்ப வேண்டாம் – Foodpanda நிறுவனம்
சிங்கப்பூரில் தமது சேவைகள் மூடப்படும் என்ற தவறான வதந்தியை நம்ப வேண்டாம் என உணவு விநியோக நிறுவனமான Foodpanda தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நடைபாதையில் ஓட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது.
அதையடுத்து உணவு விநியோக ஓட்டுநர்கள் வேறு சாதனங்களுக்கு மாற வேண்டியிருந்ததால் Foodpanda நிறுவனம் சில நெருக்கடிகளுக்கு உள்ளானது. தற்போது சமூக ஊடகங்களில் Foodpanda நிறுவனம் அதன் உணவு விநியோகிப்பாளர்களைக் கொண்ட Telegram கணக்கை மூடிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக செயற்பாடுகளைத் தொடர Foodpanda நிறுவனம் தடுமாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தகவல்களை மறுத்த நிறுவனம், தனது சேவைகள் தொடர்ந்து இடம்பெறும் என்று கூறியது. உணவு விநியோகிப்பாளர்களை @fpannouncements என்ற Telegram குழுவில் சேருமாறு Foodpanda கேட்டுக்கொண்டது. Foodpanda நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.