சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் 11ஆவது நபர் மரணம்..!!
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் 11 ஆவது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 95 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். சிங்கப்பூரரான அவர், இம்மாதம் 13 ஆம் திகதி நோய் வாய்ப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளால் நேற்றைய தினம் அவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு கூறிருந்தது.
நபருக்கு சிகிச்சை வழங்கிய Raffles மருத்துவமனை, அவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு உதவி வழங்கி வருகிறது. அதற்கு இடையில், 623 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5,050க்கு உயர்ந்துள்ளது.