சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவில் இருந்து அழைத்து வந்த 85 பேர்..!!
இன்றைய தினம் காலை சிங்கப்பூரின் நிரந்தரவாசிகள் 85 பேரை சவுதி அரேபியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்து வந்துள்ளன. சவுதி அரேபியாவில் படித்துக் கொண்டிருக்கும் 40 பேரும் அவர்களைச் சார்ந்தவர்களும் அவர்களில் அடங்குவர். சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் அவர்கள் அனைவரும் நல்ல முறையில் நாடு திரும்பியுள்ளனர். அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் அவர்கள் 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சவுதி அரேபியாவின் விமானச் சேவைகளை ரத்து செய்திருப்பதால், சிறப்பு விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரியாத்திலுள்ள சிங்கப்பூர்த் தூதரகமும், ஜித்தாவில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் அதற்கான பணிகளை ஒருங்கிணைத்தன. சிங்கப்பூர்கள் பத்திரமாய்த் திரும்புவதற்கு வழியமைத்துக் கொடுத்த சவுதி அரசாங்கத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கம் நன்றி கூறியுள்ளது.