விரைவில் கிளமென்டி ஊட்ஸ் பூங்காவை நிர்வகிக்கவுள்ள நில வனப்புத்துறையில் பயிலும் மாணவர்கள்..!!!
சிங்கப்பூரில் நில வனப்புத் துறையில் பயிலும் மாணவர்கள் விரைவில் கிளமென்டி ஊட்ஸ் பூங்காவை நடத்தவுள்ளனர். எதிர்வரும் வருட இறுதியில் குறித்த திட்டம் செயற்பட்டுக்கு வரும் என் கூறியுள்ளனர். Student-Run Park எனப்படும் மாணவர்களால் நடப்படும் இந்தத் திட்டத்தை அண்மையில் 40 தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நல்ல முறையில் வழி நடத்தி வருகின்றனர். பிடோக் டவுன் பூங்காவில் அரைவாசியை கடந்த ஜூலை மாதம் ITE College East யின் மாணவர்கள் நடத்த தொடங்கியுள்ளனர்.
மேலும் இது சுமார் 6 ஹெக்டர் பரப்பளவிற்கு சமமானது. உயர் நைட்டெக் பாடத்திட்டத்தின் 2 வருடத்தில் பயிலும் மாணவர்கள் பூங்காவையும் அதன் அம்சங்களையும் வடிவமைக்க உதவியுள்ளனர். நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் விரைவில் அதே முறையில் திட்டத்தை பின்பற்றவுள்ளது. தோட்டக்கலை, நில வனப்புத் துறையிலுள்ள சவால்களைக் செயற்படுத்துவதில் பழக்கப்பட்டவராக மாணவர்களை மாற்றுவது இந்த திட்டத்தின் இலக்காகும்.