சிங்கப்பூரின் தேசிய கீதம் அறிமுகம் செய்த 60 வருடங்களுக்கு பின் மறுபதிவு செய்து புதுப்பொலிவுடன் வெளியீடு..!!
சிங்கப்பூரின் தேசிய கீதம் அறிமுகம் செய்து 60 வருடங்களுக்குப் பின் மறுபதிவு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. முதன் முறை தேசிய கீதம் ஒலிபரப்பாகிய அதே இடத்தில் இருந்து இன்றைய தினம் மறுபதிவான தேசிய கீதம் ஒலிபரப்பானது. அதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக மாற்றம் செய்த தேசிய கீதத்தின் மறுபதிவு, மேம்பட்ட ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
தேசியக் காட்சியகத்தின் வெளியே இருக்கும் படிகளில் தேசிய கீதம் ஒலிபரப்பானது. அதே பகுதியில் 60 வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி திரு. யூசுஃப் இஸ்ஹாக் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட தினத்தில் சிங்கப்பூரின் தேசிய அடையாளங்கள் அறிமுகம் செய்தன.