சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் இன்று திடீர் வெள்ளம்..!!
நேற்றைய தினம் சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியுள்ளது. ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32, சுவா சூ காங் அவென்யூ 1 போன்ற பகுதிகளில் பிற்பகல் மூன்றரை மணியளவில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகக் கழகம் தனது பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டது .
இரண்டு பகுதிகளிலும் சுமார் 20 நிமிடங்களுக்குப் போக்குவரத்து தடைபட்டது. பிற்பகல் மூன்றே முக்கால் மணியளவில் வெள்ளம் தணிந்துள்ளது. சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில், ஒரு மணிநேரத்தில் ஆக அதிகமாக 93 மில்லிமீட்டர் அளவுள்ள பலத்த மழை பதிவாகியுள்ளது.