வர்த்தகத் தொழில் அமைச்சின் விலைக் கட்டுப்பாட்டுப் பிரிவு, சுவாசக் கவசங்களை அதிக விலைக்கு விற்றதன் காரணத்தை விளக்கியது..!
சிங்கப்பூரின் வர்த்தகத் தொழில் அமைச்சின் விலைக் கட்டுப்பாட்டுப் பிரிவு, சுவாசக் கவசங்களை அதிக விலைக்கு விற்றதன் காரணத்தை விளக்கும்படி 3 Stars நிறுவனத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 3 Stars நிறுவனத்தில் விற்க்கப்பட்ட சுவாசக் கவசங்களின் விலை மற்ற இடங்களை விட அதிகமாக உள்ளது என பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விலைக் கட்டுப்பாட்டுப் பிரிவு கடிதம் அனுப்புள்ளது.
குறிப்பிட்ட விலையில் சுவாசக் கவசங்களை விற்றதற்கான காரணம், அதை வாங்குவதற்கான செலவு, விற்பனை மூலம் வரும் இலாபம் போன்றவற்றை விவரிக்கும் படி கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வர்த்தகத் தொழில் அமைச்சின் கேள்விகளுக்கு 3 Stars நிறுவனம் நாளைய தினத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
பதிலளிக்க தவறினால் நிறுவனத்தின் மீது 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
அதைத் தொடர்ந்தும் பதிலளிக்கத் தவறினால் அபாரத் தொகை 20,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும். சிங்கப்பூரின் பயனீட்டாளர் சங்கமும், போட்டித்தன்மை- பயனீட்டாளர் ஆணையமும் சுவாசக் கவசங்கள் தொடர்பான விவகாரத்தை அணுக்கமாக கவனித்து வருவதாக கூறியுள்ளன. நியாயமற்ற விலையில் விற்கப்படும் சுவாசக் கவசங்கள் தொடர்பாக அவை விசாரிக்க தயங்காது என்று கூறியுள்ளது.