சுவாசக் கவசங்களை விற்பதாகக் கூறி, இணையத்தில் நடக்கும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் பொலிஸார் எச்சரிக்கை விடுப்பு..!!!
சிங்கப்பூரில் சுவாசக் கவசங்களை விற்பதாகக் கூறி, இணையத்தில் நடக்கும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய சுமார் 11 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதலில் வங்கிக்கணக்கு மூலமாகப் பணம் அனுப்பி, பின்னர் மருந்தகங்களிலிருந்து சுவாசக் கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மோசடி ஆசாமிகள் கூறியிருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் மருந்தகங்களில் சுவாசக் கவசங்களைப் பெறச் செல்லும்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். பொலிஸார் புகார்களை விசாரித்து வருவதாகவும், Carousell போன்ற இணையத்தளங்கள் விசாரணையில் ஒத்துழைப்பதகாவும் தெரிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் பொருள்களைப் பெறுவதற்கு முன் கட்டணம் செலுத்துவதையும், முன்பணம் செலுத்துவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நிலவரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்யும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளார்.