தவறுதலாக கன்றுக்குட்டியை கொன்ற நபருக்கு பஞ்சாயத்தில் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா??
மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள வித்திசா என்ற மாவட்டத்தில் நபர் ஒருவர்,மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கில் கன்று குட்டி ஒன்றி மீது மோதியுள்ளது. அதனால் சம்பவ இடத்திலேயே கன்றுகுட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. . அதையடுத்து அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்று கூடி கன்று குட்டியை கொன்றவர், தனது 13 வயதுடைய மகளை கன்று குட்டியின் உரிமையாளருக்கு திருமணம் செய்து வைக்க உத்தரவிட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அந்த தந்தையும், திருமண ஏற்பாடுகளை முன் நின்று நடத்தியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் இந்திய குழந்தைகள் நல அமைப்பு அந்த சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பும் முன் அச்சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு முன்னர் அந்த கிராமத்தில், இது போன்று கன்றுக்குட்டிகள் கொல்லப்பட்டால், கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கமாக உள்ளது என்று பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், தான் செய்த தவறை, அவர் உணர வேண்டும் என்பதற்கே இது போன்ற உத்தரவு என்று கூறியுள்ளனர்.