கவலைக்கிடமான நிலையில் பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.! கை விரிக்கும் வைத்தியர்கள்…நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள்..!!
முன்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் அனைத்து மொழிகளிலும் பாடியுள்ள பாடகர் பாலசுப்பிரமணியம் நடிகராகவும் மக்கள் மனம் கவர்ந்தார்.
மகன், மகள், தங்கை என அனைவரும் இசை உலகில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் இருமல் மட்டும் காய்ச்சல் இருந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.
இதன் போது இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இன்றைய தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுவிட முடியாமல் தவித்து வரும் பாலசுப்பிரமணியம் அவர்களை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றியதுடன் மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவித்துள்ளது.. எஸ் பிபி என எல்லோராலும் செல்லமாக அழைக்கப் படும் பாலசுப்பிரமணியம் அவர்கள் நலம்பெற நாமும் பிரார்த்தனை செய்வோம்..!;