மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் கௌரவ குடியுரிமை வழங்க முடிவு…!!!
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் கௌரவ குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் ஆறு பாதுகாப்புப் படையினரும், இரண்டு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலைத் அடுத்து சர்வதேச கிரிக்கெட் வாரியம், அங்கு எந்த போட்டியும் நடத்தாமல் இருந்து வந்தது. சர்வதேச அணிகளும் அங்கு செல்ல அச்சம் தெரிவித்து வந்தன. பாகிஸ்தான் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தி வந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையிலும் கூட, கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் துவங்கியதிலிருந்து பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேரன் சேமி, தொடர்ந்து அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு டேரன் சேமி தலைமையிலான அணி கோப்பையை கைப்பற்றியது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்ல தயங்கும் நிலையில், டேரன் சேமி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு வருவது மற்ற வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக பாகிஸ்தான் கருதியுள்ளது. இது போன்ற நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு சார்பில் டேரன் சேமிக்கு கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கவுள்ளது.