தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர்அணி…!!!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக களமிறங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றுள்ள நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 38 ஓட்டங்களும், ஷிக்தா பாண்டே 35 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 48 ஓவரில் 140 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் ஏக்தா பிஷ்த் 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஸ்வரி கயாக்வத் போன்றவர்கள் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேலும் இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.