எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆசிய லெவன் போட்டியில் 5 இந்திய வீரர்கள்..!!
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தில் இடம்பெறவுள்ள ஆசிய லெவன் போட்டியில் இந்திய வீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான பகல் இரவு ஆட்டத்தின் போது வங்கதேச அணி சார்பில் ஆசிய லெவன் அணியில் விளையாட டோனி, பும்ரா, கோஹ்லி ஆகிய வீரர்களை அனுப்பு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிவீரர்கள் ஒன்றிணைந்து ஆடுவார்களா என்று ரசிகர்கள் மற்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த நிலையில், ஆசிய லெவன் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் 5 இந்திய வீரர்கள் ஆசிய லெவன் அணிக்கான விளையாடவுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானில் அப்போது பி.எஸ்.எல் தொடர் நடக்கும் காரணத்தால் தான் பாகிஸ்தான் அணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை என பாகிஸ்தான் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
இருப்பினும், வீரர்களின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் போட்டி இடம்பெறும் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டோனி அணிக்கு திரும்பாத நிலையில் அவர் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.