தலைக் கவசம் அணியாமல் உந்துருளியில் சென்ற கிறிஸ்தவ போதகர் ஒருவரை வழி மறித்து அடாவடியில் ஈடுபட்ட தேரர்…!!!
மட்டக்களப்பில் தலைக் கவசம் அணியாமல் உந்துருளியில் சென்ற கிறிஸ்தவ போதகர் ஒருவரை மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் வழி மறித்து அடாவடியில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தலைக் கவசம் அணியாமல் செல்லும் கிறிஸ்தவ போதகரை ஏன் கைது செய்யவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் வினாவும் சுமண தேரர், இந்த துறவிக்கு எந்த மத ரீதியான அதிகாரம் இருக்கின்றது எனவும் கேட்கின்றார்?
“ இவர் பேராயருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் இலச்சினை ஒன்றை அணிந்திருக்கின்றார். இந்த காணெளியை நாங்கள் காட்டியிருக்கின்றோம். வழக்கு தொடர்ந்திருக்கின்றோம். கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களே, இந்த திருடர்களை அடக்கவில்லை என்றால் இது சிலுவைக்கு அப கீர்த்தியாகும். ஆடைக்கு அசௌகரியமாகும்.. உங்களது தலைவரை இந்த இடத்திற்கு வர சொல்லுங்கள். யார் எமது தலைவன். இந்த இடத்திற்கு வர சொல்லுங்கள் இன்றுடன் பிரச்சினையை முடிப்போம். இந்த கிராமத்திற்கு ஆடும் நாடகம் என்ன?. நீங்கள் மதத்தை பின் பற்றினால் எங்காவது சென்று வணங்கி விட்டு, சாப்பிட்டு குடித்து வீட்டில் தூங்குங்கள்” எனவும் சுமண தேரர்
கிறிஸ்தவ போதகர் தன்னை குறித்த இடத்தில் இருந்து செல்ல இடமளிக்குமாறு பொலிஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளார். அப்போது குறுகிடும் சுமண தேரர், பொலிஸார் இதுவரை இடமளித்தாலேயே நீங்கள் இந்த விளையாட்டை ஆடினீர்கள். இந்த சிங்கள மக்களின் பாரம்பரிய கிராம். இங்கு நீங்கள் நாடகம் ஆட முடியாது எனவும் சுமண தேரர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ போதகர் சிங்கள இனத்தை சேர்ந்தவர் தெரியவருகிறது.
Videos & Video Copyrights Owned By: lanka