கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு..!!
சுமார் 1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் பரிதாபமாக பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த தகவலை கூறியுள்ளது. அதன்படி 29 நாடுகளில் பணிபுரிந்த 1043 பேர் பலியாகியுள்ளனர். பல்வேறு காரணங்களில் இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. 2019 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை 194 பேர் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்தனர்.
இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த உயிரிழப்பாகும். 2018 ஆம் ஆண்டு இந்த இறப்புத்தொகை 239 ஆக இருந்தது. 2016- 2019 வரையில் சவூதியில் 362பேரும், குவைத்தில் 214பேரும் கட்டாரில் 133 அபேரும், தென்கொரியாவில் 32பேரும் உயிரிழந்தனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் பணியாற்றிய இலங்கையர்கள் 2018 ஆம் ஆண்டு மட்டும் இலங்கைக்கு 7 பில்லியன் டொலர்களை தமது நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது மொத்த தேசிய வருமானத்தில் 7 வீதமாகும்.