தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பேருக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் .இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் எல்லோரும் இந்தியா செல்வதற்கு தயாராகியுள்ளனர்.
தமிழர்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகள் பற்றி கலந்துரையாடல் செய்வதற்காக இவர்கள் நால்வரையும் பிரதமர் மோடி இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார்.
தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மோடியிடம் தமித்தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.அதற்கு மோடி அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு சிக்கலான பிரச்சினை என்பதால் இது குறித்து ஆய்வு செய்த பின்பே, இந்த விடையம் குறித்து பேச வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினர் நால்வரை இந்தியாவிற்கு பேச்சுவாத்தைக்கு அழைத்துள்ளார்.இந்த நிலையில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எப்போது இந்தியாவுக்கு அவர்களின் பயணத்தை மேற்கொள்ளுவார் என தெரியவில்லை எனவும் குறிப்பிடடார்.