விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வாட்ஸ் ஆப் பே எனும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவை..!!
இந்தியாவில் வாட்ஸ் ஆப் பே எனும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்வதற்கு நீண்ட காலமாக பேஸ்புக் நிறுவனம் முயற்சித்து வருகின்றது. இருப்பினும் பாவனையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதற்கான அனுமதியை வழங்குவதற்கு இந்திய அரசு தாமதித்து வருகின்றது.
மேலும் இந்த நிலையில் வாட்ஸ் ஆப் எனும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவை வசதியானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அனுமதியை National Payments Corporation of India (NPCI) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 10 மில்லியன் வரை பாவனையாளர்கள் இவ் வசதியை ஆரம்ப கட்டத்தில் பெறவுள்ளனர். இருப்பினும் இந்தியாவில் சுமார் 400 மில்லியன் வாட்ஸ் ஆப் பாவனையாளர்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வாட்ஸ் ஆப் பே ஆனது கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் என்பவற்றுடனும் இணைந்து சேவையை வழங்கவுள்ளது.